×

கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பணி

புதுக்கோட்டை, ஜன.28: புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி சுரேஷ்குமார் அரசு பொது அலுவலக வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நீதிமன்ற வளாகத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என நீதிபதிகளிடம் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து அரசு பொது அலுவலக வளாகத்தில் உள்ள நீதிமன்ற பகுதிகளில் தூய்மை பணி நேற்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் தூய்மை பணியை தொடங்கி வைத்து தூய்மை பணியில் ஈடுபட்டார். அப்போது நீதிமன்ற பகுதிகளில் இருந்த குப்பைகள், செடி, கொடிகள் போன்றவை சுத்தம் செய்யப்பட்டது. மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான ராதாகிருஷ்ணன், மகிளா கோர்ட்டு நீதிபதி ராஜலெட்சுமி, முதன்மை சார்பு நீதிபதி மகாலெட்சுமி, நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் மற்றும், நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்கள், வக்கீல்கள், நகராட்சி துப்புரவு பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் என சுமார் 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

Tags : Pudukkottai ,court premises ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளி...