×

பொன்னமராவதி பகுதியில் குடியரசு தினவிழா

பொன்னமராவதி, ஜன.28: பொன்னமராவதி பகுதியில் குடியரசு தினவிழாவையொட்டி அரசு அலுவலகங்களில் கொடியேற்றி கொண்டாடப்பட்டது. பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் சுதா அடைக்கலமணி தேசியக்கொடியேற்றினார்.இதில் ஒன்றியக்குழுதுணைத் தலைவர் தனலெட்சுமி ,ஒன்றியக் கவுன்சிலர்கள் அடைக்கலமணி, பழனிச்சாமி, மாணிக்கம், கல்யாணி, பிரியங்கா உட்பட பலர் கலந்துகொண்டனர். கண்டியாநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சித் தலைவர்செல்வி, ஆலவயல் தலைவர் சந்திரா, தொட்டியம்பட்டியில் தலைவர் கீதா, தேனூரில் தலைவர் கிரிதரன், கொன்னைப்பட்டியில் தலைவர் செல்வமணி ஆகியோர் தேசியக் கொடியேற்றினர். இதேபோல பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் செயல்அலுவலர் சண்முகம், தாலுகா அலுவலகம், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை, தீயணைப்பு நிலையம், காவல்நிலையம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் தேசியக்கொடியேற்றப்பட்டது.

Tags : Republic Day Festival ,
× RELATED குடியரசு தின விழா அணி வகுப்பு...