×

பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு மறமடக்கி அரசுப் பள்ளியில் ஓவிய கண்காட்சி

அறந்தாங்கி, ஜன.28: அறந்தாங்கி அடுத்த மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்திய நாட்டின் 71-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். ஆசிரியர் தங்கமணி முன்னிலை வகித்தார். பின்னர் பள்ளியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியை ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் பள்ளி மாணவ,மாணவியரின் 700க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் இளங்கோ செய்திருந்தார். விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜமனோகரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Exhibition and Public Exhibition at Public School ,
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...