×

கந்தர்வகோட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

கந்தர்வகோட்டை, ஜன.28: கந்தர்வகோட்டை தாலுகாவில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தாசில்தார் அலுவலகத்திலிருந்து மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி தாலுகா அலுவலகத்திலிருந்து தாசில்தார் சதீஷ் துவக்கி வைத்தார். பேரணியில் துணை தாசில்தார்கள் செல்வகணபதி, செந்தில், ஆர்ஐ லதா, கிராம நிர்வாக அலுவலர்கள் வீரபாண்டியன், கருப்பையா, உதவி தலைமை ஆசிரியர் சோமசுந்தரம் உள்பட வாக்குசாவடி நிலை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் காவலர்கள் கலந்துக்கொண்டனர். தாலுகா அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை அடைந்தது. அங்கு பள்ளி மாணவ, மாணவிகளிடையே கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற 24 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை தாசில்தார் சதீஷ் வழங்கினார்.

Tags : Voter awareness rally ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி