×

பரமத்திவேலூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி

பரமத்திவேலூர், ஜன.28: மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரைச் சேர்ந்தவர் நில்லேஷ் (24). அவரது மனைவி சுரேகா (23) மற்றும் 2  குழந்தைகளுடன் ஆட்டோவில் பாபா ரதம் தயார் செய்து, அந்த ஆட்டோவில் யாத்திரையாக ராமேஸ்வரம் சென்றதாக தெரிகிறது. இந்நிலையில், அவர்கள் நேற்று பரமத்திவேலூரை அடுத்துள்ள இரும்பு பாலம் அருகே வரும் போது ஆட்டோ நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் சுரேகா தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சுரேகா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது கணவர் நில்லேஷ் மற்றும் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இது குறித்து நில்லேஷின் தந்தை ராம்தேவ் (44) கொடுத்த புகாரின்பேரில், நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Paramathivelur ,
× RELATED போதையில் நண்பர்களுடன் எஸ்ஐயை தாக்கிய விஏஓ