×

கிருஷ்ணகிரியில் 30ம் தேதி முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.28: கிருஷ்ணகிரியில் வருகிற 30ம் தேதி முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் பிரேமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், தற்போது பணிபுரியும் பணிபுரியும் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், வருகிற 30ம் தேதி காலை 9.30 மணியளவில் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை வகிக்கிறார். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள், படைவீரர்களை சார்ந்தோர்கள் மேற்படி நாள் அன்று குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகளை விண்ணப்பமாக சமர்ப்பித்து பயனடையலாம். தங்களது விண்ணப்பங்களை இரட்டைப் பிரதிகளில் அசல் படை விலகர் சான்று மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் சமர்ப்பித்தல் வேண்டும். மேற்படி விண்ணப்பங்கள் கூட்டம் நடைபெறும் அன்று காலை 9.30 மணி முதல் 11 மணி வரை பெறப்படும். விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும்.  இவ்வாறு முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் பிரேமா தெரிவித்துள்ளார்.

Tags : Veterans Day ,Krishnagiri ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்