கரூர், ஜன. 28: கரூர் மாவட்டம் மாயனூர் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம் மாயனூர் மாரியம்மன் கோயில் தெருவினை சேர்ந்தவர் சரவணன்(35). விவசாயி. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தாயுடன் தோட்டத்துக்கு சென்று விட்டார். அன்று மாலை வீட்டுக்கு வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கம் ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. ரூ. 80 ஆயிரம் ரூபாய் அளவில் திருடு போனது குறித்து மாயனூர் காவல் நிலையத்தில் சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.