×

மூதாட்டியை அடித்துக் கொன்ற மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது

சுரண்டை, ஜன. 24:  சேர்ந்தமரம் மடத்துத் தெரு சேர்ந்தவர் சீமராயப்பன் மனைவி அந்தோணியம்மாள் (54). இவர் கடந்த 21ம் தேதி இரவு  வீட்டின் அருகே உள்ள பொதுநல்லியில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பாத்திமராஜ்(50) என்பவர் அந்தோணியம்மாளிடம் தண்ணீர் பிடிக்கக் கூடாது என்று கூறி தகராறு செய்துள்ளார். இதனால் அந்தோணியம்மாள் தண்ணீர் பிடிக்காமல் வீட்டுக்கு சென்றுவிட்டார். பாத்திமராஜ் சென்றவுடன் சிறிது நேரம் கழித்து வந்து தண்ணீர் பிடித்துள்ளார்.அப்போது திடீரென வந்த பாத்திமராஜ், கையில் வைத்திருந்த கம்பால் அந்தோணியம்மாள் தலையில் தாக்கினார். இதில் மயங்கி விழுந்த  அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து சேர்ந்த
மரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இந்நிலையில் நேற்று காலை  சேர்ந்தமரம் அருகே ரங்கநாதபுரத்தில் காட்டுப்பகுதியில் சுற்றி திரிந்த பாத்திமராஜை போலீசார் கைது செய்தனர்.


Tags :
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி