×

ஓட்டல் தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

கேடிசி நகர், ஜன. 24: தெற்கு வீரவநல்லூர் பாரதிநகரை சேர்ந்தவர் கண்ணன் (40). நெல்லை டவுனில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக டவுனில் உள்ள பஸ் நிறுத்தத்தில் கண்ணன் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட வலிப்பால் மயங்கிவிழுந்த அவர், சிறிதுநேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டவுன் போலீசார், கண்ணனின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி