×

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி நடத்துகிறார்

புதுக்கோட்டை, ஜன.24:தூத்துக்குடி ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா, உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் புதுக்கோட்டை பஜாாில் நடந்தது. ஒன்றிய செயலாளரும் முன்னாள் சேர்மனுமான சண்முகவேல் தலைமை வகித்தார்.அவைத்தலைவர் ராமசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், மாவட்ட பிரதிநிதி வேல்சாமி, ஒன்றிய கவுன்சிலர் மேலத்தட்டப்பாறை சுதர்சன், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிவமாடசாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் பால்ராஜ், ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் தளவாய்புரம் சுப்பையா, சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனர்.

புதுக்கோட்டை குமாரகிரி ஊராட்சி தலைவர் ஜாக்சன் துரைமணி வரவேற்றார்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இசக்கிசுப்பையா, நடிகை எமி ஆகியோர் பேசினர். இசக்கி சுப்பையா பேசும்போது, தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் நல்லாட்சி நடத்தி வருகிறார். மக்கள் அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்களை வழங்கி அதிமுக ஆட்சிக்கு புகழ்சேர்த்து வருகிறார் என்று கூறினார். கூட்டத்தில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மதியழகன், பேச்சாளர் ராஜசேகர், எம்ஜிஆர் மன்றம் மாரிமுத்துபட்டன், ஊராட்சி செயலாளர்கள் கந்தசாமி, லூர்துபாண்டி, பண்டாரம்,சுப்பையா, லெட்சுமணன், கிளை செயலாளர்கள் புதுக்கோட்டை பஜார் நயினார். சுப்புநாராயணன், முடிவை ராமசாமி, கல்லம்பரம்பு ஆறுமுகம், நடுக்கூட்டுடன்காடு நடராஜன்,அல்லி கணேசன், முடிவை பார்வதிகுமார், மகளிரணியினர் உட்பட பலர் பங்கேற்றனர். குமாரகிரி ஊராட்சி கழக செயலாளர் துரைராஜ் நன்றி கூறினார்.

Tags : Edappadi Palanisamy ,Jayalalithaa ,
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...