திருப்பூர்,ஜன.24: திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சுபாஷ் சந்திரபோஸின் 123ம் ஆண்டு பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு மாநகர தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்து சுபாஷ் சந்திரபோஸின் படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஈஸ்வரன், கோபால்சாமி, சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் தங்கராஜ் வரவேற்றார். இதில், கதிரேசன், ரத்தினமூர்த்தி, மகிளா காங்கிரஸ் தலைவர் கார்த்தீஸ்வரி உட்பட கிளைக் கழக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.