×

தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 4 கொள்ளையர்களுக்கு 3 ஆண்டு சிறை

பாலக்காடு, ஜன.24:பாலக்காடு மாவடடத்தில் ஒத்தப்பாலம், பட்டாம்பி, மலம்புழா ஆகிய இடங்களில் பல்வேறு வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை, தனியாக செல்கின்ற பெண்களிடம் வழிப்பறி, கொலை வழக்கு போன்றவற்றில் தொடர்புடைய குற்றவாளிகளை தனிப்படையினர் தேடி வந்தனர்.மேற்கண்ட தொடர் குற்றங்களில் ஈடுபட்ட பாலக்காட்டை சேர்ந்த ரமேஷ், ஒத்தப்பாலத்தை சேர்ந்த தல்ஷீர், பாலக்காடு மூத்தான்தரை சேர்ந்த கிருஷ்ணபிரசாத், சுரேஷ் ஆகிய 4 பேரை கடந்த 2018ம் ஆண்டு பாலக்காடு டவுண் டி.எஸ்பி. விஜயகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்ஜித் கைது செய்தார். இதையடுத்து இவர்கள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இவர்கள் மீதான வழக்கு பாலக்காடு செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில்  நீதிபதி மோகன்தாஸ் கைது செய்யப்பட்டிருந்த 4 பேருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags : robbers ,prison ,
× RELATED கைதிகளுக்கு நூலகம் திறப்பு