பந்தலூர்,ஜன.24:பந்தலூர் அருகே அம்பலமூலா பழங்குடியினர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பந்தலூர் அருகே அம்பலமூலா பகுதியில் எஸ்.எஸ்.ஏ. சார்பில் இயங்கி வரும் பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சியை அம்பலமூலா அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயா துவக்கி வைத்தார். அம்பலமூலா வயநாடு ஆதிவாசிகள் நலச்சங்கம் மேலாளர் பீட்டர் ரொனால்டு முன்னிலை வகித்தார். பழங்குடியினர் மாணவர்களின் பல்வேறு அறிவியல் படைப்புகள் அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்றது காண்போரை வியக்க வைத்தது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆதிவாசி நலச்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.