×

மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

ஈரோடு, ஜன.24: ஈரோடு லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் (35). தொழிலாளி. இவர், நேற்று பி.பெ. அக்ரஹாரம் காலிங்கராயன் வாய்க்கால் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்றிருந்த மர்மநபர் ஒருவர் சுந்தரை வழிமறித்து நான் இந்த ஏரியா ரவுடி, ரூ.500 கொடு, இல்லாவிட்டால் கை, கால்களை உடைத்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசில் சுந்தர் அளித்த புகாரின் பேரில், நேற்று முன்தினம் பணம் கேட்டு மிரட்டிய கருங்கல்பாளையம் பழைய மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த அர்சத் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு