×

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டின் சுவர் இடித்து அகற்றம்

அந்தியூர், ஜன.24: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே  சின்னதம்பிபாளையம்  ஊராட்சி அண்ணமார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கைலாசம் (64). இவரது வீட்டின் சுவர், அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையுறாகவும், வீதியை மீறி ஆக்கரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளதாகவும் கூறி இப்பகுதி மக்கள், கலெக்டரிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, ஆக்கரமிப்பு செய்து கட்டிய கட்டிடத்தை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை, ஊராக வளர்ச்சி துறையினர் கடந்த 2018ல், கைலாசத்திற்கு இது சம்பந்தமான நோட்டிஸ் அனுப்பினர். ஆனால், அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், ஆக்கரமிப்பு செய்துள்ள இடத்தை மட்டும் அகற்ற வேண்டும் என நீதிமன்றம், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
அதன்படி, போலீசார் உதவியுடன் பொக்லைன் இயந்திரத்தின் மூலம், கைலாசம் வீட்டின் சுற்றுச்சுவர் மற்றும் குளியலறையை நேற்று அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதனால், இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Demolition ,
× RELATED NCERT பாடப்புத்தகங்களில், பாபர் மசூதி...