×

உதவித்தொகை ெபற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை

திருச்சி, ஜன.24: அரசு உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை முகாம் திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. திருச்சியில் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்த 18 வயதுக்கு கீழ் உள்ள தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை பெற நடந்த பரிசோதனை முகாமிற்கு சமூக நலத்துறை தனித் துணை கலெக்டர் பழனிதேவி தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவீந்திரன் முன்னிலையில் டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்தனர். முகாமில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்தன்மை வாய்ந்த அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Tags :
× RELATED போலீசிடம் தகராறு வாலிபர் மீது வழக்கு