×

விவசாயிகள் வலியுறுத்தல் முத்துப்பேட்டையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை

முத்துப்பேட்டை, ஜன.24: முத்துப்பேட்டையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பேட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் புனிதராஜ்(30). இவரது மனைவி யமுனா மேரி(24). இவர்களுக்கு 2 ஆண், 1பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் கடந்த 2ம்தேதி கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் யமுனா மேரி உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். இவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று யமுனா மேரியை மீட்டு படுகாயத்துடன் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட யமுனா மேரி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) திருக்களார் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை