திருச்செங்கோடு, ஜன.24: திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகில் நேதாஜி உருவப்படத்திற்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தனகோபால் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட பொதுச்செயலாளர் கண்ணன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் லோகநாதன் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். நகர பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.