×

மாணவன் தூக்கிட்டு தற்கொலை

அருப்புக்கோட்டை, ஜன. 24: அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கீழகன்னிச்சேரியைச் சேர்ந்த நாகநாதன் மகன் ஹரீஸ்பாபு (17) பிளஸ்2 படித்து வந்தார். நேற்று காலை வகுப்புக்குச் சென்றுவிட்டு மதியம் பள்ளியின் விடுதியில் சாப்பிட்டார். மீண்டும் வகுப்புக்கு வரவில்லை. வகுப்பு ஆசிரியர் மற்றொரு மாணவர் ஹரீஸிடம் விடுதியில் சென்று பார்த்து வருமாறு கூறினார். ஹரீஸ் சென்று பார்த்தபோது, ஹரீஸ்பாபு வாயில் துணியைக்கட்டியபடி தூக்கில் தொங்கினார். இதுகுறித்து மாணவன் ஆசிரியரிடம் தெரிவித்தார். வகுப்பு ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார். தலைமை ஆசிரியர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அருப்புக்கோட்டை டிஎஸ்பி வெங்கடேசன், திருச்சுழி டிஎஸ்பி சசிதர் ஆகியோர் சம்பவ இடம் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பெற்றோர் வந்து பார்வையிட்ட பின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Student ,suicide ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...