வருசநாடு, ஜன.24: கடமலைக்குண்டு அருகே தொப்பையாபுர் வேலுச்சாமி மகன் மனோகரபாண்டியன்(22). இவர் அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா தோட்டத்தில் விவசாய நிலத்தில் டிராக்டரை வைத்து உழுது கொன்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மனோகரபாண்டியன் படுகாயமடைந்தார். உடனடியாக கடமலைக்குண்டு தனியார் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை தனியாார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து கடமலைக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.