உத்தமபாளையம், ஜன.24: ராயப்பன்பட்டியில் பிட் இந்தியா சார்பில் உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. ராயப்பன்பட்டி கிராம ஊராட்சியில் பிட் இந்தியா சார்பில் உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. பேரணியை ஊராட்சி தலைவர் ஆரோக்கியசாமி என்ற பால்ராஜ் தொடங்கி வைத்தார். இதன் சிறப்புகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் சுந்தரபாண்டி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.