×

பம்மனேந்தலில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் முதியோர் உதவித்தொகை

கமுதி, ஜன.24:  கமுதி அருகே பம்மனேந்தலில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில், பரமக்குடி கோட்டாட்சியர் தங்கவேல் தலைமை வகித்தார். கமுதி தாசில்தார் செண்பக லதா, ஊராட்சி தலைவர் சசிகலா முன்னிலை வகித்தனர். ஊராட்சி துணைத் தலைவர் சேகரன் வரவேற்று பேசினார். முகாமில் 56 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 10 பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டது. 6 பேருக்கு பட்டா மாறுதல், 4 பேருக்கு விவசாய இடுபொருள்கள் வழங்கப்பட்டது.  முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் செந்தில்வேல் முருகன், வட்ட வழங்கல் அலுவலர் கதிரவன், மண்டல துணை தாசில்தார்கள் கண்ணதாசன், ராமசாமி, வருவாய் ஆய்வாளர்கள் வேலாயுதம், சோனைமுத்து, முருகன், பொதுப்பணித் துறை பொறியாளர் ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் குருமூர்த்தி நன்றி கூறினார்.

Tags : Public Relations Camp ,Pammanenthal ,
× RELATED திருத்தணி ஒன்றியத்தில் மக்கள்...