×

ரஜினி மீது வழக்குப்பதிய வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகம் போராட்டம்

மேலூர், ஜன.24: ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மேலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு பதிவு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மேலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு பதிவு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் மணி அமுதன் தலைமை வகித்தார். இதில் விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ கட்சியினர் கலந்து கொண்டனர். மேலூர் தாலுகா அலுவலகத்தின் முன்பு நிருபர்களிடம் மணி அமுதன் கூறுகையில், 1971ல் சேலத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் நடைபெறாத ஒன்றை தந்தை பெரியார் நிகழ்த்தியதாக நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டு பொய்யாக திரித்து பேசி வருகிறார். இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி துரை, சின்னச்சாமி, அய்யாவு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பக்ருதீன், எஸ்டிபிஐ சித்திக் உட்பட பலர் இருந்தனர்.

Tags : Dravidian Liberation Organization ,Rajini ,
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...