கும்பகோணம், ஜன. 24: கும்பகோணம் அடுத்த கதிராமங்கலம் வனதுர்க்கை அம்மன் கோயில் சாலையை சேர்ந்தவர் கலியன். தனியார் பள்ளி நிர்வாகி. நேற்று முன்தினம் வழக்கம்போல் கலியன் மற்றும் இவரது மனைவி ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்றனர். மாலையில் வந்தபோது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து ரூ.2 லட்சம் மற்றும் 15 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பந்தநல்லூர் போலீசில் கலியன் புகார் செய்தார். தஞ்சையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து கொள்ளை நடந்த வீட்டில் இருந்த தடயங்களை பதிவு செய்தனர். இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.