பொன்னமராவதி,ஜன.24: பொன்னமராவதி அருகே ஆலவயல் ஊராட்சியில் ஓட்டுமொத்த தூய்மைப்பணி நடந்தது. பொன்னமராவதி அருகே ஆலவயல் ஊராட்சியில் தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் வகையில், ஒட்டுமொத்த தூய்மை இயக்கம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா சக்திவேல் தலைமை வகித்தார். குளோரின் பவுடர் தூவப்பட்டு தூய்மைப்பணி நடந்தது. இதில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்கள் உதவியுடன் ஊரெங்கும் குளோரின் பவுடர் தூவப்பட்டது.