×

மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்

புதுக்கோட்டை, ஜன.24: அரசு மேல்நிலைபள்ளிகளில் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, இலுப்பூர், புதுக்கோட்டை என 3 கல்வி மாவட்டங்கள் உள்ளது. இந்த கல்வி மாவட்டங்களில் 90க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைபள்ளிகள் உள்ளது. இந்த பள்ளிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சில பள்ளிகளில் ஒரு சில பாடங்களுக்கு ஆசிரியர்கள் காலிப்பணியிடம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் 11ம் வகுப்பு, 12 ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைத்து பாடங்களையும் படிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில பள்ளியில் வரலாற்று ஆசிரியர்கள் இல்லை. ஒரு சில பள்ளிகளில் உயிரியல், ஒரு சில பள்ளிகளில் கணித ஆசிரியர்கள் இல்லை. இதனால் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் பள்ளியில் வழங்கப்பட்டுள்ள வகுப்பு அட்டவணைப்படி பாடங்கள் படிப்பதில் மாணவர்கள் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலை கடந்த ஆண்டு இருந்ததால் தான் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைந்தது. இதனை தவிர்க்க இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறையாத வகையில் காலிப்பணியிடங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Teachers ,secondary school ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...