கரூர், ஜன. 24: கரூர் பயிற்சி மையத்தில் தொலைதூரக்கல்வி நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. கரூர் பயிற்சி மையத்தில் அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார், பெரியார், மனோன்மணியம் சுந்தரனார், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களின் மூலம் தொலைதூர கல்விபயில 2019- 2020ம் ஆண்டிற்கும், 2020ன் காலாண்டு வருடத்திற்கும், நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.தேர்வுகள் மற்றும் செய்முறை வகுப்புகள், செமினார் மற்றும் செய்முறை வகுப்புகள் கரூரிலேயே நடைபெறும்.
கரூர் மினிபஸ் நிலைய மாடியில் உள்ள பயிற்சி மையத்தில் பயின்று அரசு மற்றும் தனியார் பணியில்சேர்ந்து பலதுறைகளில் உயர்பதவி வகிக்கின்றனர். இல்லத்தரசிகள், கல்லூரி மாணவ மாணவியர், வேலைக்கு செல்பவர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்லூரி சென்று பயில இயலாதவர்கள் பணியில் இருப்பவர்கள் உயர் பதவி கிடைக்கவும், சேர்ந்து பயனடையலாம் என பயிற்சி மையத்தின் தாளாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.