×

குழித்துறை அருகே தாமிரபரணி ஆற்றில் வாகன புரோக்கர் சடலம்

மார்த்தாண்டம், ஜன.24: குழித்துறை  அருகே வாகன புரோக்கர் ஒருவர் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். அவர்  அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து  வருகின்றனர்.மார்த்தாண்டம் அருகே கரவிளாகம்  பகுதியை சேர்ந்தவர்  மணிகண்டன் (45). பழைய வாகனங்கள் வாங்கி விற்கும் புரோக்கர் தொழில் செய்து  வந்தார். நேற்று காலை குழித்துறை பாலம் அருகில் தாமிரபரணி ஆற்றில் பிணமாக கிடந்தார்.  அந்த வழியாக சென்றவர்கள்  களியக்காவிளை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.   போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் இது  குறித்து குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அங்கிருந்து மீட்புபடை  வீரர்கள் வந்து சடலத்தை மீட்டனர்.  ஆற்றில்  பிணமாக கிடந்த மணிகண்டனின் உடலில் காயங்கள் உள்ளன. எனவே அவர் தவறி விழுந்து  இறந்தாரா? அல்லது யாராவது அடித்து கொலை செய்து ஆற்றில் வீசி சென்றார்களா?  என்பது  உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து  வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Vehicle Broker ,Kuzhithurai ,Thamirabarani River ,
× RELATED தாமிரபரணி ஆற்றில் இருந்து நேற்று 8,000...