×

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சங்கராபுரம், ஜன. 24:    சங்கராபுரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை கள்ளக்குறிச்சி கோட்டம், சங்கராபுரம் உட்கோட்டத்தின் மூலம் சங்கராபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோட்ட உதவிப்பொறியாளர் பிரபாகரன் தலைமை தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் சர்மா வரவேற்றார். சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். பேரணி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்டு சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் சங்கராபுரம் உட்கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர். திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் நடந்த ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை டிஎஸ்பி மகேஷ் துவக்கி வைத்தார்.
இந்த பேரணி திருக்கோவிலூர் உட்கோட்டத்தை சேர்ந்த காவலர்கள் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு ஐந்துமுனை சந்திப்பில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காவல் நிலையத்தை அடைந்தது. இதில் திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் ரத்தினசபாதி, உதவி ஆய்வாளர் குணபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை