×

செய்யாறில் பள்ளி மாணவன் கொலை வழக்கு சம்பவ இடத்தில் ஏடிஎஸ்பி விசாரணை

செய்யாறு, ஜன.24: செய்யாறில் பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட இடத்தில் ஏடிஎஸ்பி அசோக்குமார் நேற்று விசாரணை நடத்தினார். செய்யாறு அடுத்த பாரதி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், டீக்கடை தொழிலாளி. இவரது மகன் கார்த்திக்(14). அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 20ம் தேதி மாலை பள்ளிக்கு ெசன்ற மாணவன் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம், பைங்கினர் ஏரிக்கு செல்லும் கால்வாயில் உள்ள பாறை மீது கார்த்திக் சடலமாக கிடந்தான். அவரை மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து, சடலம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.

இதுதொடர்பாக செய்யாறு போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளிகளை தேடிவருகின்றனர். இந்நிலையில், ஏடிஎஸ்பி அசோக்குமார் நேற்று கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொலையில் சம்பந்தப்பட்ட நபர்களை விரைவில் கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். அப்போது, டிஎஸ்பி சுந்தரம் இருந்தனர். தொடர்ந்து, திருவண்ணாமலையில் இருந்து மோப்பநாய் மியா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தூரம் ஓடிச்சென்ற நாய் பின்னர் நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

Tags : ATSP ,investigation ,murder ,
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...