×

ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற ஒரு வாரம் கேடு

ஊட்டி, ஜன. 23: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள், நடைபாதை மற்றும் கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியுள்ளவர்கள், கடை வைத்துள்ளவர்கள் ஒரு வாரத்திற்குள் அகற்ற நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஊட்டி நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி கூறியிருப்பதாவது:- ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வருவாய் ஆவணங்களின்படி நீர் நிலைகள் என குறிப்பிட்டுள்ள பகுதிகள், பிரதான குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள இடங்கள், பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள இடங்கள், நீரோடைகள், வடிகால்கள், நீர் தேக்கங்கள், கழிவு நீர் கால்வாய்கள், மழை நீர் வடிகால்கள் மற்றும் சாலையோரங்களில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களில் உள்ள நிரந்தர மற்றும் தற்காலிக ஆக்கிரமிப்புக்களை உரிமையாளர்கள் ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும். இவ்வாறு சரஸ்வதி கூறியுள்ளார்.

Tags : buildings ,
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...