×

நாளை மின் தடை பகுதிகள்

கோவை, ஜன. 23: கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (24ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்,  குனியமுத்தூர் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான சுந்தராபுரம், சிட்கோ, போத்தனூர், குறிச்சி,  ஹவுசிங்யூனிட், ஈச்சனாரி, எல்.ஐ.சி காலனி, எல் அன் டி பைப்பாஸ் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி  முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.

சோமனூர்: சோமனூரை அடுத்த செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (24ம் தேதி) செல்லப்பம்பாளையம், மோப்பிரிபாளையம், ஆலம்பாளையம், பொன்னாண்டாம்பாளையம், பொத்தியாம்பாளையம், தட்டாம்புதூர், மற்றும் மாப்பிள்ளை கவுஸ்டன் குட்டை ஆகிய ஊர்களில் நாளை (24ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்காது. மேற்கண்ட தகவலை சோமனூர் செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு