×

சிறப்பாக பணியாற்றிய 150 போலீசாருக்கு பதக்கம்

ஈரோடு, ஜன.23: ஈரோட்டில் சிறப்பாக பணியாற்றிய 150 போலீசாருக்கு பதக்கம் வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுதந்திர தினவிழா மற்றும் குடியரசு தினவிழாவின்போது பல்வேறு அரசு துறையை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கி, பதக்கம் அளிப்பது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு குடியரசு தினவிழா ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் வரும் 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில், மாவட்டத்தில் காவல் துறையில் சிறந்து பணியாற்றிய 150 போலீசார்களுக்கு பதக்கம் வழங்க தேர்வு செய்யப்பட்டு, கலெக்டரின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில், முதல் 80 பேர் முதல் 100 பேர் வரை நேரடியாக கலெக்டரிடம் பதக்கம் பெறுவர். மீதமுள்ளவர்களுக்கு ஈரோடு எஸ்.பி.சக்திகணேசன் வழங்குவார் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், கல்வித்துறை, அரசு துறைகளில் பதக்கம் பெறுவோர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

Tags : police officers ,
× RELATED படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி...