×

திருவில்லிபுத்தூரில் சாலை பாதுகாப்பு வார விழா

திருவில்லிபுத்தூர், ஜன. 23: திருவில்லிபுத்தூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், 31வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இதன் முதல்நிகழ்வாக வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் உள்ள தனியார் மில்லில் ஓட்டுநர் மற்றும் அலுவலக ஊழியர்களுக்காக கண் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜேந்திரன் கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு குறித்த கருத்துக்களை எடுத்துரைத்தார்.அரசு மருத்துவமனை கண் மருத்துவர் நதியா தலைமையில் இலவசமாக கண் பரிசோதனை நடந்தது. இதில், குறைபாடு கண்டவர்களுக்கு, அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர்.நிகழ்ச்சியில் தனியார் மில் உரிமையாளர் பலராமராஜா, அரசு உதவி வழக்கறிஞர் பொன்ராஜ், மருத்துவர் சாந்தி கலந்து கொண்டனர்.

Tags : Road Safety Weekend ,Tiruviliputhur ,
× RELATED திருவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டி பிணம்