×

சிவகங்கை ஜிஹெச்சில் மருத்துவரை தாக்கியவர் கைது

சிவகங்கை, ஜன. 23: சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். கடந்த 20ம் தேதி இரவு சிவகங்கை அருகே சாத்தரசன்கோட்டையை சேர்ந்த அண்ணாமலை (19), நாடாமங்கலத்தை சேர்ந்த ராணுவ வீரர் திருமால்கண்ணன்(30) ஆகிய இருவரும் டூவீலரில் வரும் போது நேருக்கு நேர் மோதிய விபத்தில் அண்ணாமலை மற்றும் திருமால் கண்ணன் இருவரும் இறந்தனர். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் நேற்று முன்தினம் இருவரது உடலுக்கும் பிரேத பரிசோதனை நடந்தது.

அப்போது அங்கு வந்த பயிற்சி மருத்துவர் ஒருவரை அண்ணாமலையின் நண்பர்கள் தாக்கியதாக கூறி மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் மருத்துவக்கல்லூரி டீன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சிவகங்கை டவுன் போலீசார் பயிற்சி மருத்துவரை தாக்கியதாக சிவகங்கை அருகே நாலுகோட்டையை சேர்ந்த வசந்தகுமார் (23) என்பவரை கைது செய்தனர். குமார் என்பரை தேடி வருகின்றனர்.

Tags : Doctor ,
× RELATED பூசணி விதையின் பயன்கள்!