×

திருப்புத்தூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

திருப்புத்தூர், ஜன, 23: திருப்புத்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து நடந்த பேரணியில் காவலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர். இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் ஜனவரி 2வது வாரத்தில் தொடங்கி 7 நாட்களுக்கு சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இது 31 வது சாலை பாதுகாப்பு வாரமாகும். அதன்படி நேற்று திருப்புத்தூரில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேரணியை டவுன் இன்ஸ்பெக்டர் ஆனந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி அண்ணா சிலையில் இருந்து மதுரை ரோடு வழியாக பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை, அக்னி பஜார், நான்கு ரோடு, காரைக்குடி ரோடு வழியாக சென்றது. இந்த பேரணியில் மாணவர்கள், பொதுமக்கள், தலைக்கவசம் அணிவது குறித்த கையில் பதாகைகள் ஏந்நி கலந்து கொண்டனர். பேரணியில் நேஷனல் கல்லூரி முதல்வர் சுரேஷ்பிரபாகர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர். பேரணியில் எஸ்ஐ., முத்துகிருஷ்ணன் மாணவர்கள்- பொதுமக்களிடம், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். அவசியம் தலைக்கவசம் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும். காரில் செல்பவர்களும், ஓட்டுபவர்களும் சீட் பெல்ட் கட்டாயம் அணிந்து பயணிக்க வேண்டும். அப்போதுதான் விபத்து ஏற்பட்டாலும் உயிர் சேதம் இல்லாமல் தப்பிக்க முடியும் என்று அறிவுரை வழங்கினார். மேலும் பொதுமக்கள், வாகனஓட்டிகளுக்கு விழிப்புணர்வு குறித்த துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.

Tags : Awareness rally ,Tirupur ,
× RELATED திருவாடானையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி