×

டிஆர்ஓ மகன் விபத்தில் பலி கலெக்டர் அஞ்சலி

மதுரை, ஜன.23: மதுரை அருகே நடந்த வாகன விபத்தில் பலியான மாவட்ட வருவாய் கோட்டாட்சியரின் மகன் உடலுக்கு கலெக்டர் வினய் அஞ்சலி  செலுத்தினார்.  மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம். இவரது மகன் பாலமுருகன். கடந்த சில தினங்களுக்கு முன் வரிச்சியூர் ரோட்டில் நடந்த வாகன விபத்தில் இவர் படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக மதுரை மேலூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இவரது உடல் பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இரவு 9 மணி அளவில் பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே மதுரை மாவட்ட கலெக்டர் வினய் பிணவறைக்கு வந்தார். விபத்தில் பலியான பாலமுருகன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து கலெக்டர் அலுவலக அதிகாரிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து உடல் சொந்த ஊரான சிவகங்கைக்கு கொண்டு ெசல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் மற்றும் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர். பின்னர் உடல் அடக்கம் நிகழச்சி நடக்க உள்ளது. 

Tags : TRO ,accident ,
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...