×

நாமக்கல்லில் பரிசளிப்பு விழா

நாமக்கல், ஜன.23:சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு, நாமக்கல்  காவல்நிலையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கு பேச்சு, கவிதை மற்றும்  கட்டுரை போட்டிகள் நேற்று நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இன்ஸ்பெக்டர்  செல்வராஜ் வரவேற்றார். நாமக்கல் டிஎஸ்பி காந்தி, வெற்றி பெற்ற மாணவ,  மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்  மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். திருச்செங்கோடு: சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, மல்லசமுத்திரம் காவல்  துறை சார்பில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு  விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது. கட்டுரை, பேச்சு, ஓவியப்போட்டி போன்றவை  நடந்தன. இந்த போட்டிகளில் அரசு ஆண்கள், பெண்கள்  மேல்நிலைப்பள்ளியின் மாணவ,  மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை எஸ்ஐ ராமதாஸ்  தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Gifting Ceremony ,Namakkal ,
× RELATED வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அசோலா தீவன உற்பத்தி குறித்து செயல் விளக்கம்