×

ஓமன் நாட்டில் பணிபுரிய ஐடிஐ எலக்ட்ரீசியன்கள் விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி, ஜன.23: ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய, ஐடிஐ எலக்ட்ரீசியன் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை ஓவர்சீஸ் மேன் பவர் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் மூலம், ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய, 25 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட ஐடிஐ எலக்ட்ரீசியன் தேர்ச்சியுடன், ஓஎச்எல் எக்யூப்மெண்ட் 33 கேவி., டிரான்ஸ்மிஷன் மற்றும் டிஸ்ட்ரிபியூசன், டவர் மெயின்டனன்ஸ் மற்றும் எச்டி ஓவர் ஹெட் பழுது பார்த்தல் ஆகிய பிரிவுகளில் 5 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு, மாதம் ₹33 ஆயிரம் முதல் பணி அனுபவத்திற்கேற்ப ஊதியம் வழங்குவதுடன், விசா மற்றும் ஓமன் நாட்டின் சட்டதிட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள், வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும்.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், கல்வி மற்றும் செல்லத்தக்க பாஸ்போர்ட் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் omceq106@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண்.42, ஆலந்தூர் சாலை, எண்.42, ஆலந்தூர் சாலை, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-600032 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், ஊதியம் மற்றும் பணி விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.com வாயிலாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : ITI Electricians ,Oman ,
× RELATED ஐவர் ஹாக்கி உலக கோப்பை: ஓமனில் இன்று தொடக்கம்