×

லாரிகள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர் பலி

தர்மபுரி, ஜன.23: பாலக்கோடு அருகே லாரிகள் நேருக்கு நேராக மோதிக்கொண்ட விபத்தில், திருப்பூரை சேர்ந்த டிரைவர் பலியானார். பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு மரக்கட்டை பாரம் ஏற்றிய லாரி, நேற்று முன்தினம் தர்மபுரி வழியாக சென்று கொண்டிருந்தது. அதே போல், தர்மபுரியில் இருந்து பெங்களூருக்கு சாக்குபைகளை ஏற்றி கொண்டு மற்றொரு லாரி சென்று கொண்டிருந்தது. பாலக்கோடு கர்த்தார்பட்டி அருகே, நேற்று காலை வந்த போது, எதிர்பாராத விதமாக 2 லாரிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், மரக்கட்டை பாரம் ஏற்றி வந்த லாரி ஓட்டுனர், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்து, தகவலறிந்து வந்த பாலக்கோடு போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இறந்தவர் திருப்பூரைச்சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா