×

காவல்துறை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

தர்மபுரி, ஜன.23: தர்மபுரி டவுன் போக்குவரத்து போலீஸ் சார்பில், நேற்று இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வாரவிழா, கடந்த 20ம் தேதி துவங்கியது. இதில் முதல் 2 நாட்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்நிலையில் 3வது நாளான நேற்று, தர்மபுரி டவுன் போக்குவரத்து பிரிவு போலீஸ் சார்பில், நான்கு ரோடு அருகே இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. டிஎஸ்பி ராஜ்குமார் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். முகாமில் ஆட்டோ ஓட்டுனர்கள், வேன் ஓட்டுனர்கள், மினிபஸ் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்பரிசோதனை நடந்தது. முகாமில் எஸ்ஐக்கள் கிருஷ்ணவேணி, சின்னசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : eye treatment camp ,
× RELATED பிஎஸ்ஆர் கல்லூரி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்