×

நெல்லையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நெல்லை, ஜன. 23:  நெல்லையில் நாளை (24ம் தேதி) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.இதுகுறித்து நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால்  ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் சிறிய அளவிலான  தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.  அதன்படி நாளை (24ம் தேதி) காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வைத்து நடக்கிறது. முகாமில் சுஸ்லான் நிறுவனம், பல தனியார்  நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாக வந்து தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் சுஸ்லான்  நிறுவனத்தினர் 2018, 2019ல் டிப்ளமோ (எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்)  முடித்தவர்களை தேர்வு செய்ய உள்ளனர். தேர்வானவர்களுக்கு நெல்லை மாவட்டத்திலேயே பணிவாய்ப்புகள் வழங்கப்படும்.

மேலும் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2, பட்டப்படிப்பு, ஐடிஐ, மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடைய பதிவுதாரர்களும் பங்கேற்கலாம். இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள பதிவுதாரர்கள் நாளை (24ம் ேததி) காலை 10.30 மணிக்கு அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும்.  முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் தங்களது தேவை விவரங்களை நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரிலோ அல்லது 0462-2500103 என்ற தொலைபேசி எண்ணிலோ தேர்வு செய்யப்படவுள்ள வேலைநாடுநர்களின் தேவை குறித்து உடனே தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Private Placement Camp ,Nellore ,
× RELATED திருக்கோவிலூர், நெல்லூரில் பயங்கரம்: இரு விபத்துகளில் 6 பேர் பலி