×

திருவண்ணாமலையில் இன்று நடக்கிறது மகளிர் சாதனை கண்காட்சி

திருவண்ணாமலை, ஜன.23: பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில், மகளிர் சாதனை கண்காட்சி இன்று திருவண்ணாமலையில் நடக்கிறது.பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் எனும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ெபண்களின் அனைத்துத்துறை சாதனைகளை விளக்கும் வகையில், மகளிர் சாதனை கண்காட்சி, திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. கண்காட்சியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைக்கிறார். அதில், மாவட்ட நீதிபதி திருமகள், எஸ்பி சிபிசக்கரவர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலர் நடராஜன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். உலக அளவில், தேசிய அளவில், மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டு, தங்கள் அனுபவங்களை தெரிவிக்க உள்ளனர். கண்காட்சி ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகமும், பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து செய்துள்ளன

Tags : Women's Adventure Exhibition ,Thiruvannamalai ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...