ஆரணி, ஜன.23: ஆரணி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் சீருடைகள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.ஆரணி மாவட்ட கல்வி அலுவலகத்திற்குட்பட்ட ஆரணி, மேற்கு ஆரணி, பெரணமல்லூர், தெள்ளார் ஆகிய ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் சீருடை வழங்கப்பட உள்ளது.இதையொட்டி, நேற்று மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து, பள்ளிகளுக்கு கொண்டு செல்ல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த புத்தகப்பை மற்றும் சீருடைகள், வாகனங்கள் மூலம் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.தொடர்ந்து, இன்று அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் சீருடை வழங்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.