×

துவக்க நாளில் அடுத்தடுத்த விபத்தில் 2பேர் பரிதாப பலி

திருவெண்ணெய்நல்லூர், ஜன. 23:  திருவெண்ணெய்நல்லூர் அருகே சாலை 31வது சாலை பாதுகாப்பு விழா துவக்க நாளிலேயே அடுத்தடுத்து சாலை விபத்தில் இரண்டு பேர் பலியாகினர்.   விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் தர்(25), விவசாயி. இவரின் நண்பர் வெளியூர் செல்வதற்காக பைக்கில் அழைத்து சென்று மடப்பட்டு பஸ்நிறுத்தம் பகுதியில் வழி அனுப்பி வைத்து விட்டு வீடு திரும்பியுள்ளார். வி.ஜி.பி நகர் பகுதி அருகே சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாக வாகனம் மோதி தர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரிசெய்தனர். மேலும் தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி அவரின் தந்தை சிவலிங்கம் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  

மற்றொரு விபத்து: திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சேகர்(37). சொந்த வேலை காரணமாக மொபட்டில் சென்றார். அரசூர், இந்திரா நகர் பகுதி அருகே திருச்சி-  சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, திருச்சியிலிருந்து, சென்னை நோக்கி சென்ற கார் சேகர் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கதினர் மற்றும் அவரின் உறவினர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது செல்லும் வழியில் சேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுபற்றி அவரின் சகோதரன் முருகன் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 31வது சாலை பாதுகாப்பு வார விழாவின் துவக்க நாளிலேயே அரசூர் பகுதியில் நடந்த அடுத்தடுத்த சாலை விபத்தில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தால் திருவெணெ–்ணெய்நல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   

Tags : accident ,
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!