×

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சி, ஜன. 23: கள்ளக்குறிச்சி கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. கோட்ட பொறியாளர் தேவஇரக்கம் தலைமை தாங்கி அரசு பள்ளி மாணவர்களின் பேரணியை துவக்கி வைத்தார். நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் பிரபாகர், நீதிதேவன், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் கலந்து கொண்டார். பேரணியானது கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கி கள்ளக்குறிச்சி நகர முக்கிய சாலை வழியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பள்ளி மாணவர்கள் கையில் பதாகை ஏந்தியபடி சென்றனர். நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சர்மா, கார்த்திகேயன், உதவி ஆய்வாளர் மணிகண்டன், பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், உதவி தலைமை ஆசிரியர்கள் அருள், மணிமொழி, என்சிசி ஆசிரியர் கணேசன் மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி என்சிசி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை