திருச்சி, ஜன.22: திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வரும் பிப்.5ம் தேதி மாலை 4.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. முன்னாள் படைவீரர்களுக்கான சுயவேலைவாய்ப்பு கருத்தரங்கும் நடத்தப்படவுள்ளது. மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சார்ந்தோர் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்கள் வாயிலாக கலெக்டரிடம் நேரில் அளித்து பயன்பெறலாம்.