×

பள்ளி ஆண்டு விழா

அருப்புக்கோட்டை, ஜன.22: அருப்புக்கோட்டை தேவாங்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. சேலம் அர்த்தநாரி லூம்சென்டர் நிர்வாக இயக்குநர் அழகரசன் தலைமை வகித்தார். தேவாங்கர் மகாஜனசபை தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். பள்ளிச் செயலாளர் கண்ணன் வரவேற்றார். தலைமையாசிரியை தவமணி ஆண்டறிக்கை வாசித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக ஆண்டறிக்கையை ஓய்வு ஆசிரியை சரோஜினி வாசித்தார். பழைய மாணவர் சங்க ஆண்டறிக்கையை சார்நிலை கருவூல அலுவலர் சாந்தா வாசித்தார். பரிசுகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுபாஷினி, அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சண்முகநாதன், நாகர்கோவில் என்எஸ்கே நிர்வாக இயக்குநர் டாக்டர் நிர்மலா, டாக்டர் சாந்திப்பிரியா ஆகியோர் மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினர். நிகழ்ச்சியில் மகாஜனசபை செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் வீரசுந்தரமணி, கல்விக்குழுமத்தலைவர் முருகேசன், பொருளாதாரக்குழு தலைவர் ஜெயராமன், நிர்வாக அதிகாரி பாண்டியராஜன் உட்பட மகாஜன சபை நிர்வாகிகள், பள்ளிச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. உதவி தலைமையாசிரியை காளியம்மாள் நன்றி கூறினார்.

Tags : School Anniversary ,
× RELATED ஆதனூர் அரசு பள்ளி ஆண்டுவிழா