×

திருவில்லிபுத்தூரில் மாநாடு விளக்க பிரசாரம்

திருவில்லிபுத்தூர், ஜன. 22: நாட்டில் உள்ள அனைத்து துறை தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும்,தொழில்வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்க கோரியும்,அகில இந்திய சிஐடியூ சங்கத்தின் சார்பில் அகில இந்திய மாநாடு நாளை (ஜன.23) முதல் 27 வரை சென்னையில் நடைபெறவுள்ளது. இதன் விளக்க பிரசாரம் திருவில்லிபுத்தூரில் நடந்தது.இதன் ஒரு பகுதியாக தியாகிகள் நினைவு கூறும் கொடி பயண வரவேற்பு மற்றும் கணேசன் நினைவு ஜோதி சென்னைக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பிச்சைக்கனி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வீரசந்தனம், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் பாலகிருஷ்ணன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி, தமிழ்நாடு அரசு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்ட நிர்வாகி செல்வராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் கருப்பையா, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் சசிகுமார், நகர செயலாளர் ஜெயக்குமார் உள்பட சிஐடியு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tiruviliputhur ,
× RELATED பொதுமக்கள் அதிருப்தி திருவில்லிபுத்தூரில் பரவலாக மழை