×

உத்தமபாளையத்தில் முன்னறிவிப்பின்றி மின்சாரம் நிறுத்தம் அவதிக்குள்ளாகும் பொது மக்கள் ரேசன் கடைகளில் பரிதவிப்பு

உத்தமபாளையம், ஜன.22: உத்தமபாளையம் மின்சார வாரியத்தில் மின் தடை பற்றி முன்கூட்டியே அறிவிக்காமலேயே மின்தடை தொடர்கிறது. இதனால் ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம் பாதிக்கிறது. உத்தமபாளையம் துணை மின்நிலைய கட்டுப்பாட்டில் உள்ள உத்தமபாளையம், ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், கருக்கோடை, ராமசாமிநாயக்கன்பட்டி, ஆனைமலையன்பட்டி உள்ளிட்ட ஊர்களில் நேற்று மின்தடை ஏற்பட்டது. காலை வழக்கம்போல் 9.45 மணிக்கெல்லாம் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மாலைதான் மீண்டும் சப்ளை செய்யப்பட்டது. பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யும்போது, 2 நாட்கள், 3 நாட்களுக்கு முன்பே அறிவிப்பது வழக்கம். மக்கள் கூடும் இட ங்களில் போர்டுகளில் எழுதி தகவல் தெரிவிப்பதும், தினசரி பேப்பர்களில் அறிவிப்பதும் வழக்கமான ஒன்றாக உள்ளது. ஆனால் இந்த நடைமுறை எல்லாம் இப்போது காற்றில் கரைந்துபோய்விட்டது. குறிப்பாக நேற்று காலை தான் மக்களுக்கே ஷட்டவுன் என்ற தகவலே தெரிகிறது. இதனால் இந்த பகுதிகளில் இயங்கும் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். கடைக்காரரிடம் கேட்டால் மெஷின் சார்ஜ் போய்விடுகிறது என்றகிறார். மேலும் வீடுகளில் தண்ணீர் ஏற்ற முடிவதில்லை. பொதுக்குழாய்களில் மோட்டார் போடாத பரிதாப நிலை எழுகிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Tags : Uthamapalayam ,
× RELATED பெண் தற்கொலை